டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, கடந்த மாதம் இறுதியில்,  அதாவது  பிப்ரவரி 25 அன்று ராய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் முழுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு மூத்த மருத்துவ ஆலோசகர் நெஞ்சக மருத்துவர் டாக்டர் அருப் பாசு மற்றும் வரது குழுவினரின் சிகிச்சை அளித்து  கண்காணித்து வருகன்றனர்.

இதையடுத்து,  சர் கங்கா ராம் மருத்துவமனையின் டிரஸ்ட் சொசைட்டியின் தலைவர் டாக்டர் டிஎஸ் ராணா  வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியாகாந்தியின்   உடல்நிலை சீராக உள்ளது என அறிவித்துள்ளது.