சென்னை

ள்ளிவாசல் குறித்த சர்ச்சைக் கருத்து தெரிவித்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பொட்டல்புதூர் பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் மிகவும்  புகழ் பெற்றதாகும்  சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இந்த பள்ளிவாசல் குறித்து சர்ச்சைக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அசன் மைதீன் என்பவர் தென்காசி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.  அந்த சர்ச்சைக் கருத்துக்களை சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சீனிவாச சுப்ரமணியன் என்பவர் வெளியிட்டுள்ளார்.

தென்காசி சைபர் கிரைம் காவல்துரையினர் அசன் மைதீன் அளித்த புகாரின் அடிப்படையில் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சீனிவாச சுப்ரமணியனை கைது செய்துள்ளனர்.  அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.