சென்னை

மிழக மின் வாரியம் வேகத்தடைகளுக்கு அருகே மின் கம்பங்களை அமைக்க தடை விதித்துள்ளது.

தமிழக மின்வாரியம் சாலைகளில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்றி புதிய பாதுகாப்பான மின் கம்பங்களை அமைத்து வருகின்றது.

நேற்று தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

”உடனடியாக பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும்.  அவ்வாறு அமைக்கும் போது சாலைகளின் ஓரங்களில் அமைக்கப்படும் மின்கம்பங்களை வேகத்தடைகளுக்கு அருகில் அமைக்காமல் சற்று தள்ளி பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் 

சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட பழைய மின்கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும், வேகத்தடைக்கு அருகே இருக்கும் மின்கம்பங்களை சற்று தள்ளி அமைக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அகற்றப்பட்ட மின்கம்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்”

என்று தெரிவித்துள்ளது.