துரை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரவுடிகளை ஒடுக்குவது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அவரை புகழ்ந்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது ரவுடிகளின் இல்லத்தில் கடும் சோதனை நடந்து வருகிறது.  ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நடவடிக்கைகளால் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.  அவ்வகையில் திமுகவின் கடும் எதிரியான அதிமுக வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புகழ்ந்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள து.  மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளதை விரைவில் சீரமைக்க வேண்டும்   தவிரப் பாதாளச் சாக்கடை நீர் குடிநீரில் கலப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலங்களில் கொடுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்துள்ளனர்,  ஆனால் அந்த ஒப்பந்தப்புள்ளிகளில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. ஆகவே, அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் முரடர்களை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதைப் போல் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.” எனத் தெரிவித்துள்ளார்.