காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி 34 இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன.  இந்த பகுதிகளில் தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளன.   கடந்த 10 நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் அதிரடி வேட்டை நடத்தி குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல ரவுடிகள் வீட்டில் சோதனை நடந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன.  நேற்று அவ்வகையில் காவல்துறை எஸ் பி சுதாகர் உத்தரவின் பேரில் 34 இடங்களில் சுமார் 200 காவல்துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.   சோதனையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய 770 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.  எஸ் பி சுதாகர் இந்த சோதனைகளை நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.   மாவட்டம் முழ்வதும் இந்த சோதனைகள் நடைபெறும் எனவும் ரவுடிகள் கைது செய்யப்பட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.