சென்னை,

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் உடல்நலக் குறைவால் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படத்தாகவும், இதையடுத்து மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் சென்னை விமான நிலையம் வந்தபோது, துரைமுருகன் திடீரென நேற்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு நலமாகி வீடு திரும்பினார்.

வயோதிகம் காரணமாக அவ்வப்போது உடல்நலத்தில் அவருக்கு பிரச்சினை ஏற்படுவதாக துரைமுருகன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்..