சென்னை:  ரூ.2000 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் எங்கு கைது செய்யப்பட்டார், யார் அவரை கைது செய்தது என்ற விவரம் வெளியாகவில்லை,.

தமிழ்நாட்டைச் சேர்ந்த போதைபொருள் கடத்தல் மன்னான,  தலைமறைவாக இருந்த முன்னாள் திமுக நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில்  அவர் இன்று கைது  செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே பரவியிருக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூளையாகவும், அரசனாகவும்  ஜாபர் சாதிக் இருந்ருதுள்ளதாக, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ரூபாய் 2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  தலைமறைவாக இருந்து வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு தப்பி ஓடும் வழியில் ஜெய்ப்பூரில் வைத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  என்சிபி துணை இயக்குநர் ஜெனரல் (டி.டி.ஜி) ஞானேஷ்வர் சிங், கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 45 சூடோபீட்ரின் ஏற்றுமதிகளை அனுப்பியதாக போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்திற்கு தகவல் அளித்ததாக தெரிவித்தார். இந்த ஏற்றுமதிகள் சுமார் 3,500 கிலோ சூடோபிட்ரின் ஆகும், இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ .2,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் என்சிபி மற்றும் டெல்லி போலீஸ் குழுக்கள் நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ளதாக ஞானேஷ்வர் சிங் கூறி இருந்தார். மேலும் இந்த போதை பொருள் கடத்தல் கூட்டணியின் சூத்திரதாரி ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தலைமறைவாக உள்ளார். சூடோபீட்ரின் மூலத்தை கண்டறிய அவரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று ஞானேஸ்வர் சிங் கூறி இருந்தார்.

இதனை அடுத்து திமுகவின் அயலக அணியின் நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் அப்பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டார். ஜாபர் சாதிக் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள அருளானந்தம் தெருவில் உள்ள அவரது வீட்டில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று ஜாபர் சாதிக் ஆஜர் ஆக வேண்டிய நிலையில், இதுவரை ஆஜராகாமல் தலைமறைவாக இந்து வந்தார். இந்நிலையில் தற்போது ஜாபர் சாதிக்கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் உடன் தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில், இது தொடர்பாக அவர் அளித்திருந்த விளக்கத்தில், தாம் சென்னை மாநகர காவல் அணையராக இருந்தபோது 10 சிசிடிவி கேமிராக்களை ஜாபர் சாதிக் ஸ்பான்சர் செய்தார். போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் குற்றவாளி என்று தெரிந்தது, சிசிடிவி கேமராக்களை நிறுத்தி விட்டோம். ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல என்றும், அது வெறும் பரிசுப்பொருள்தான் என்றும் சங்கர் ஜிவால் கூறியது குறிப்பிடத்தக்கது.