திருச்சி

ஞ்சைக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வருவதால் திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.இன்று காலை 10.30 மணிக்கு அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். பிறகு திருச்சியிலிருந்து கார் மூலம் அவர் தஞ்சை செல்கிறார்.

முதல்வர் மு க ஸ்டாலின் தஞ்சாவூரில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு திருச்சிக்கு வந்து இங்கிருந்து விமான மூலம் சென்னை செல்கிறார். முதல்வர்சர் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்குச் சென்று விட்டு மீண்டும் திருச்சிக்கு அவர் பயணம் செய்யும் சாலைகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.