தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள முத்துராமலிங்க தேவரின் வெண்கலச் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28-ம் தேதி 29 மற்றும் 30 தேதி என 3 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படும்.

கடந்த 28-ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும், 29-ஆம் தேதி அரசியல் விழாவாகவும், 30-ஆம் தேதி குருபூஜை விழாவாகவும் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மாலை அணிவித்து மரியாதை மரியாதை செலுத்தினார்.