சென்னை:
ளுநருக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகிவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசட்டும் என்று தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில், ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். பொறுப்பில் இருந்து கொண்டு பேசுவதை ஆளுநர் ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசட்டும்.

பெரிய பதவிக்காக பாஜக தலைமையை மகிழ்விக்க விரும்பினால் ஆளுநர் பதவி விலக வேண்டும். வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பேசுவதாக ஆளுநர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறோம். ஆளுநர் ரவி பேசுவது அவர் எடுத்து கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிரானது என்பது அவருக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.