சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், தொகுதியும் மாற்றப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சட்டசபை தேர்தலில் தேமுதிக சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பா.மாதவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக எம். சிவக்குமார் (மாவட்ட கழக அவைத்தலைவர்) நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, கீழ்வேளூர் தொகுதி மாற்றப்பட்டுள்ளதாகவும் மற்றொரு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், கீழ்வேளூர் தனி தொகுதியில் ஆர்.பிரபாகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கீழ்வேளூருக்கு பதிலாக தஞ்சாவூர் தொகுதி மாற்றப்பட்டுள்ளது.

கீழ்வேளூர் தனி தொகுதியில் அமமுக போட்டியிடுவது என்று ஒருமித்த கருத்துடன் முடிவு எடுத்துள்ளளது. அதற்கு பதிலாக மாற்று தொகுதி அடிப்படையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சை தொகுதி வேட்பாளராக பா.ராமநாதன் (தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர்)  நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.