காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறை தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது.

பிவிபி படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கிய 35 லட்ச ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதை அடுத்து இயக்குனர் லிங்குசாமி மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து லிங்குசாமி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமிக்கு வழங்கிய 6 மாத சிறை தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.