தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தற்போது விஜய் நடிப்பில் வாரிசு படத்தை வெற்றிகரமாக உருவாகியுள்ளார்.

இதனை அடுத்து தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம்வரும் சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க உள்ளார் தில் ராஜு.

வாரிசு படத்தை போல் சிவகார்த்திகேயன் படத்தையும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த ஹரிசங்கர் இயக்க உள்ளார்.

சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து கமல்ஹாசன் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.

இந்த நிலையில் தில் ராஜு தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.