ராஞ்சனா, அத்ராங்கி ரே ஆகிய இந்தி படங்களை தொடர்ந்து மேலும் இரண்டு பாலிவுட் படங்களில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘வாத்தி’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் தனுஷ்.

அவரை வைத்து இரண்டு இந்தி படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் தனது கலர் யெல்லோ நிறுவனம் சார்பில் தயாரிக்க இருக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதன்மூலம், இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைய இருக்கிறது.