திருநள்ளாறு

திருநள்ளாற்றில் உள்ள கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

திருநள்ளாற்றில் அமைந்துள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலைச் சேர்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நள நாராயண பெருமாள் கோவிள்அதிக பக்தர்களை ஈர்க்கும் கோவிலாக விளங்குகிறது.  இங்குள்ள ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சனேயரை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை 9 முதல் 10.30-க்குள் தொடங்குவதற்கான பூஜை நடைபெற்றது.அதையொட்டி  கொடி மரத்தைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கொடிமரம் முறிந்து விழுந்தது.

இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியும் மனக்கலக்கமும் அடைந்துள்ளனர்.  கோவில் நிர்வாகம் உரிய பராமரிப்பு செய்யவில்லை என பக்தர்கள் பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருநள்ளாறு ஸ்ரீ நளபுர நாயகி சமேத நள நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் திட்டமிட்ட நேரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கவில்லை.

இதற்கான மாற்று ஏற்பாடு செய்வதற்கான பணிகளில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.