சென்னை: தமிழகஅரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்துள்ள நிலையில்,  புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை  விதித்துள்ளது. மேலும் நீச்சல் குளம்  செயல்பட அனுமதி வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ந்தேதியுடன் முடிவடைய இருப்பதால், நேற்று தலைமைச் செயலகத் தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கைஎப டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து  உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. டிசம்பர் 31 முதல் ஜனவர் 1ம் தேதி வரை 2 நாட்கடள கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி ஆம் தேதி முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையின்றி வழக்கம்போல் செயல்படும் என்றும், கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும் என்றும், ஊரடங்கு காரணமாக மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதால் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி எனவும் அரசு தெரிவித்துள்ளது.

நீச்சல் குளங்களுக்கு அனுமதி

கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பரவல்

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் பரவி வருவதால் மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்தியுள்ளார்.