சென்னை

மிழகத்தில் காலியாக உள்ள மருத்துவக் கல்வி பட்டப்படிப்புக்கான இடங்களுக்கு கால்ந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் வசம் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக மொத்தம் உள்ள காலியிடங்களில் 15 சதவீத இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வை மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக நடத்தி வருகின்றன.

தற்போது நிரப்பப்படாமல் மீதம் 86 இடங்கள் உள்ளன. தமிழக அரசு இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறைக்குக் கடிதம் எழுதி இருந்தது.  இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.  ஆகவே காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது. .

அதன் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல் நவ. 7 ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  நவம்பர் 7 முதல் 15ம் தேதி வரை மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் மருத்துவ சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.