சென்னை

ருக்கா வினோத்துக்கு பாஜக அலுவலகம் மீது குண்டு வீசிய வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை மனு அளித்துள்ளது.

ரவுடி கருக்கா வினோத்துக்கு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.   அந்த ஜாமீனில் வெளி வந்த கருக்கா  வினோத் ஆளுநர் மாலிகை மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்.

எனவே பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

காவல்துறை அளித்துள்ள இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது, ரவுடி கருக்கா வினோத் நவம்பர் 15ம் தேதிக்குள் பதிலளிக்கச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.