திருப்பூர்:
திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ள்ளது.

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியான 2 மாணவர்கள், ஒரு மாணவி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஜனவரி 22, 23, 24 நடந்த சோதனையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது என்பது குறிப்பிடத்தகது.