கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையைத் தடுப்பதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முழுமூச்சுடன் போராடி வருகின்றன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடுதலை நாடுகள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வந்தது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே பிரபலங்கள் விழிப்புணர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் ,

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் டிக்டாக் பிரபலம் ஜீ.பி முத்துவுடன் இணைந்து வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது .