சென்னை: பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் செய்யப்படுவதாகவும், இதில் கோவை, சேலம், ஈரோடு உள்பட 9 மாவட்ங்கள் இணைக்கப்படும் என  தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் மானிய கோரிக்கை விவாதத்தின்போது  பேசிய தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்ர் ஏ.வ.வேலு, கடந்த  ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதியன்று , கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம் உருவாக்கப்படும் என்ற அறிப்பினை வெளியிட்டார்.

இதையடுத்து, தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை மண்டலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலுவலங்களை மறுசீரமைத்து பணி அடிப்படையிலும் மற்றும் புதிய பணியிடங்களை தோற்றுவித்தும்,கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக மண்டலம் உருவாக்கப்படும் என்றும், அதில்,  கோவை,நீலகிரி,திருப்பூர்,ஈரோடு,சேலம்,நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி கோவை மண்டலம் புதிதாக உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.