சென்னை: கோவையில் திமுகவினரை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில்  கோவை எம்.ஜி.ஆர் இளஞரணி நிர்வாகி மற்றும் வடவள்ளி சந்திரசேகர் மீது, காவல் துறையினர்  கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஹ
கோவை தொண்டமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, திமுக சார்பில்,  அந்த பகுதியைச் சேர்ந்த, நாட்டு மாடு, ஜல்லிக்கட்டு ஆராய்ச்சியாளர்,  கார்த்திக்கேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார். அமமுக சார்பில் எஸ்.ஆர்.சதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கி.கலையரசி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சாஜஹான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  அங்கு,  திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன.
சமீபத்தில் திமுக நிர்வாகிகள் மீது வேலுமணி ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவை தொண்டாமுத்தூர் தேர்தல் அதிகாரி செந்தில் அரசனிடம் திமுக வழக்கறிஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் , கோவை எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகியும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான வடவள்ளி சந்திரசேகர் மீது கொலை மிரட்டல் உட்பட இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.