சென்னை

ந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டில்லிக்குப் புறப்பட்டுள்ளார். 

நாளை டில்லியில்  இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்  இதையொட்டி அவர் இன்ரு டில்லிக்கு புறப்பட்டுள்ளார். 

தற்போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலு தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் மு க ஸ்டாலின் தனது டில்லி பயணத்தின்போது மழை பாதிப்பு குறித்து ஆலோசிக்கப் பிரதமரிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவர் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நிவாரண நிதி வழங்கிடப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிகிறது.