சென்னை:
ள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நாளை காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் நாளை (ஜூலை 19ஆம் தேதி) வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம் வந்த காரணத்தினால் அது தள்ளிக் கொண்டே சென்றது. இந்த நிலையில் மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணியானது சிறிது நாட்களுக்கு முன் முடிந்த நிலையில், தற்போது அவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பேசிய ள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நாளை காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.