தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் தேஜா இணைந்து நடித்த ஆச்சார்யா திரைப்படம் ஏப்ரல் 29 அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். திரைப்படமும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஏப்ரல் 1 தெலுங்கு வருடப்பிறப்பின் போது இரண்டு படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது வியாபார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து, ஆச்சார்யா படம் ஏப்ரல் 29 ம் தேதி ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.ஆர். மார்ச் 25 ம் தேதி ரிலீசாக இருப்பதால் போதிய இடைவெளியுடன் ஆச்சார்யா படத்தை வெளியிட இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.