டெல்லி: 2நாள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் ர் மு.க.ஸ்டாலின் இன்று காங்கரிஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் தனிவிமானத்தில் முதன்முதலாக டெல்லி பறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு ல் பிரதமர் நரேந்திர மோடியை  மோடியை சந்தித்தார். அப்போது பல்வேறு  கோரிக்கைகள் கொண்ட மனுவை வழங்கினார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது,  பிரதமருடனான சந்திப்பு மன நிறைவான சந்திப்பாக அமைந்துள்ளதாகவும் மேலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் மோடி உறுதியளித்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கரிஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.