சென்னை: நடிகை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி வன்புணர்வு செய்த பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

நடிகை சாந்தினி என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் பல ஆண்டுகாலம் திருமணம் செய்யாமலே குடித்தானம் நடித்தி வந்துள்ளார். தற்போது அவரை திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அவர் திருமணம் செய்ய மறுப்பதாகவும், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் வறும் சாந்தினி, அவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில்  போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மணிகண்டனின் முன்ஜாமின் மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.  இதையடுத்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.அவர்கள்  மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.