மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை சென்றுள்ள முதல்வர், இன்று காலை தேவரின் பிறந்தநாளை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பசும்பொன் செல்லும்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னதாக காலை  மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள வெண்கல தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வருடன் அமைச்சர்கள்  மூர்த்தி, பெரியசாமி மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

பின்னர், சாலை மார்க்கமாக பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் நினைவிடத்திலும் முதல்வர் மரியாதை செய்ய இருக்கிறார்.