சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல் துறைவாரியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அத்துடன் இன்று  அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது.

தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் உயர்அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றுமுதல் ஒவ்வொரு துறை வாரியாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தலைமைச்செயலகத்தில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

முன்னதாக இன்று காலை தலைமைச் செயலகத்தில்  தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது.