சென்னை:
மிழகத்தில் இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது.

மீன்கள் இனப்பெருக்கம், கடல் வளம் காத்திட கோடை காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கடந்த 61 நாட்களாக அமலில் இருந்த இந்த தடை காலம் இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது.

இதையடுத்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.