சென்னை:
சென்னை வேளச்சேரி பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பகுதிகளை நேற்று இரவு முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை. தங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் மாநகராட்சி பணியாளர்களின் இடைவிடாத பணியே என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அடாத மழையிலும் விடாது பணியாற்றும் ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி என்றும் அவர் கூறினார்.