சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்குக்சாவடிகள் அமைப்பது, கொரோனா பாதுகாப்புநடைமுறைகள் என பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

மேலும் 100சதவிகிதம் வாக்குகளை பதிவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து வரும் தேர்தல் ஆணையம், பதற்றமான வாக்குச்சாவடிகள், தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும்,வாக்காளர்களுக்கு  பணப்பட்டுவாடாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது பற்றியும்   மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்கிறார்.