சென்னை

சென்னை புறநகர் ரயில்கள்  முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்றும் இயங்க உள்ளன.

தமிழகத்தில் கொரோனா  பரவலைக் கட்டுப்படுத்தவரும் 10 ஆம் தேதி வரை  இரவு நேர ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்றவற்றுக்குப் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவிர 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமலாக உள்ளது.  அன்று நாள் முழுவதும் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற எதற்காகவும் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது   இந்நிலையில் இன்று தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்

“சென்னையில் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.  பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பயணம் செய்ய வேண்டும்.  அன்று சென்னை – அரக்கோணம், சென்னை – கும்மிடிப்பூண்டி, சென்னை – வேளச்சேரி,  சென்னை – செங்கல்பட்டு தடங்களில் ரயில்கள் இயக்கப்படும்” 

எனக் கூறப்பட்டுள்ளது.