சென்னை

மிழக பாடத்தில் புதுச்சேரி வரலாற்றைச் சேர்க்க வேண்டும் எனத் தமிழக முதல்வருக்குப் புதுவை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அதில் அவர், “இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து  புதுச்சேரி யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.  ஆயினும் தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் தமிழக பாடத்திட்டத்தைப் புதுச்சேரி கல்வியில் பின்பற்றி வருகிறது.  புதுச்சேரி மக்கள் தமிழகப் பாடத்திட்டத்தில் புதுச்சேரியின் வரலாற்றைச் சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக.கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தமிழகத்தின் போராட்ட வரலாற்றிலிருந்து பிரெஞ்சு ஆளுகையில் இருந்து மீண்ட புதுச்சேரியின் போராட்ட வரலாறு வேறுபட்டது.  ஆகவே தமிழக பாடத்திட்டத்தில் புதுச்சேரியின் வரலாற்றையும் சேர்ப்பது புதுச்சேரியின் வரலாற்றைப் புதுச்சேரி மற்றும் தமிழக மாணவர்கள் அறிய முடியும்.

எனவே தமிழகப் பாடத்திட்டத்தில் புதுச்சேரியின் வரலாற்றையும் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதற்காகப் பாடத்திட்டங்களைத் தயாரிக்கவும் அதற்கான நூல்களை எழுதவும் தேவையான கல்வியாளர்களைப் புதுச்சேரி அரசின் கல்வித்துறை பரிந்துரை செய்யவும் அறிவுறுத்தத் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.