சென்னை

மிழகத்தில் இன்று 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,76,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,36,620 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,82,39,971 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து 9 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 28 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 27,76,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,833 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 984 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,08,763 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 30,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 4,531 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,77,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 8,665 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 186 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,53,075 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 15,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 1,039 உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 408 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,54,744 பேர் பாதிக்கப்பட்டு 2,524 பேர் உயிர் இழந்து 2,50,606 பேர் குணம் அடைந்து தற்போது 1614 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,78,779 பேர் பாதிக்கப்பட்டு 2,553 பேர் உயிர் இழந்து 1,72,780 பேர் குணம் அடைந்து தற்போது 3,446 பேர் சிகிச்சையில் உள்ளனர்.