சென்னை: 2021 ஆம் ஆண்டில் சென்னை குடியிருப்பு விற்பனை 38% வளர்ச்சி; இந்த ஆண்டில் 11,958 வீடுகளின் விற்பனையை பதிவு செய்துள்ளது என சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், கட்டுமான பொருட்களின் கடுமையான விலை உயர்வு காரணமாகவும், வீடுகள் விற்பனை வெகுவாக குறைந்தது. தொற்று குறைவைத்தொடர்ந்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு,  நாட்டிலுள்ள 8 முக்கிய நகரங்களில், கடந்த ஆண்டில், வீடுகள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள அறிக்கையில், சென்னையில் குடியிருப்பு விற்பனை கடந்த 2021ம் ஆண்டில் 38% உயர்ந்துள்ளது என்றும், விலையும்  7% அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது..

நைட் ஃபிராங்க் இந்தியா தனது முதன்மையான அரையாண்டு அறிக்கையின் 16வது பதிப்பை (இந்தியா ரியல் எஸ்டேட்: H2 2021)  தற்போது வெளியிட்டுள்ளது. அதில்,  சென்னையின் குடியிருப்பு சந்தை நிலையான மீட்சியைக் கண்டுள்ளது என்று தெரிவித்து உள்ளது. சென்னையில் மட்டும் குடியிருப்புகளின் விற்பனை 38 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு % (YoY) 11,958 வீடுகளில் பதிவு செய்யப்பட வேண்டும். 2021 ஆம் ஆண்டில் 12,783 யூனிட்கள் கூடுதலாக, அதாவது  77% ஆண்டுக்கு புதிய வெளியீடுகள் குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளது என தெரிவித்து உள்ளன.

2021 காலண்டர் ஆண்டிற்கான மொத்த அலுவலக பரிவர்த்தனைகள் 3.9 மில்லியன் சதுர அடியாக இருந்தது. 2021 ஆம் ஆண்டில் அலுவலக இடத்திற்கான புதிய சென்னை 2021ல் 3.9 மில்லியன் சதுர அடியிலான அலுவலக இடங்கள் விற்பனை செய்யப்பட்டது என்று  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2021 அண்டில் 12 ஆயிரத்து 783 வீடுகள் புதிதான தொடக்கங்கள் 77% எனும் உயர்வைப் பதிவு செய்துள்ளன. 2021-ஆம் ஆண்டுக்கான மொத்த அலுவலகப் பரிவர்த்தனைகள் 3.9 மில்லியன் சதுர அடியாக இருந்தது. 2021ல் புதிதாக நிறைவடைந்த அலுவலக இடங்கள் 1.8 மில்லியன் சதுர அடியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை குடியிருப்பு விற்பனை 2020 2வது அரையாண்டில் படிப்படியாக அதிகரித்து 2021ல் 6 ஆயிரத்து 206 வீடுகளாக உயர்ந்து 9% வளர்ச்சியுடன், மீட்சிக்கான நிலையான பாதையை அடைந்துள்ளது.

ஓஎம்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள தெற்குப் பகுதிகள் பெரும்பாலான வீடு வாங்குபவர்களின் ஆர்வத்தை 51% விற்பனை அளவிற்கு தொடர்ந்து பெறுகின்றது. அதே சமயம் போரூர், வளசரவாக்கம் மற்றும் பூந்தமல்லி போன்ற மிகவும் மலிவான இடங்கள் 34% அளவைக் கொண்டுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.