சென்னை: திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே விசாரணை நடத்தி  பரபரப்பை ஏற்படுத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் இந்த வழக்குகளை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி மற்றும் பொன்முடி ஆகியோர் மீதான  சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து ஆட்சி மாற்றங்களின்போது,  சிறப்பு நீதிமன்றங்கள்  விடுவித்து  தீர்ப்பளித்தன.

இந்த தீர்ப்புகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து கடுமையாக விமர்சனம் செய்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்  , இந்த தீர்ப்புகளை  மறுஆய்வு செய்ய வேண்டும்  அறிவித்ததுடன்,  தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை பச்சோந்தியாக செயல்படுகிறத என்றார். தொடர்ந்து, இந்த வழடக்குகளை  தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

இதை எதிர்த்து திமுக அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5ம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என, சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

அதேநேரம், திமுக அமைச்சர்கள் சார்பில், உச்சநீதி மன்றத்தில்,  மறு ஆய்வு தொடர்பான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிகக் கூடாது என  மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின் முடிவில், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது,  உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்துப் பார்க்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசிடம்  அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் கேட்டுக் கொண்டார். அதையேற்று, வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அதனால், இந்த வழக்குகள் நேற்று (7ந்தேதி) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  நேற்றைய விசாரணை பட்டியலில் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் இடம் பெறவில்லை. இதன் மூலம், மறு-ஆய்வு வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க மாட்டார் என திமுகவினர் நிம்மதி அடைந்தனர்,.

இந்த நிலையில், இன்றைய விசாரணை பட்டியலில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று பிற்பகலில் கடைசி வழக்குகளாக விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேசே விசாரிக்கலாம் என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கிவிட்டார் என கருதப்படுகிறது. இது திமுகவினருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேள்விக்குறியான தமிழ் கட்டாயம் உத்தரவு: ஆசிரியர் பணி தேர்வுக்கு உருது, தெலுங்கு, கன்னட மொழிகள் சேர்த்து அரசாணை வெளியீடு…