மதுரை: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கைவிசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, மனு குறித்து  மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி  தமிழ்நாட்டில், நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தை ஏற்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர்  அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு வழக்கறிஞர்,  நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடர்பான முடிவு, தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும், அரசே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும்  வாதிடப்பட்டது. மேலும், மனுதாரர் விளம்பர நோக்கில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள்  கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அப்படி கொண்டுவரப்பட்டால் பள்ளிக்கட்டணம் செலுத்த சிரமத்திற்குள்ளாகும் ஏழை மக்கள் பலர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வதுஙககஙனவுசதடிண  8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.