திருச்சி:
பேருந்து உரிமையாளரை மிரட்டிய புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகரான சூர்யா கைது செய்யப்பட்டார்.

பாஜகவில் இணைந்து 2 மாதங்கள் கூட முழுமையடையாத நிலையில், தனியார் பேருந்து ஒன்றைக் கடத்திய புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மோதியதில் தனது காருக்கு சேதம் ஏற்பட்டதாக பேருந்தின் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சூர்யா மீது குற்றம் சுமத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.