சென்னை:
பிஎஸ் இன்று இரவு டெல்லி பயணம்செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை எழுந்துவரும் நிலையில் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று இரவு பன்னீர்செல்வம் டெல்லி செல்ல இருப்பதாகவும் தேர்தல் கமிஷன் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாக அவர் ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.