தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 497, செங்கல்பட்டில் 190, திருவள்ளூரில் 63 மற்றும் காஞ்சிபுரத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 50, கன்னியாகுமரி 49, திருநெல்வேலி மற்றும் திருச்சியில் தலா 18 பேருக்கும், தூத்துக்குடி 17, சிவகங்கை 14, மதுரை மற்றும் சேலத்தில் 13, திருப்பூர் 9, ஈரோடு, விருதுநகர் மற்றும் நீலகிரியில் தலா 8 பேருக்கும், தென்காசி 7,

கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் வேலூரில் தலா 5 பேருக்கும்

பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலையில் தலா 4 பேருக்கும்

கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 3 பேருக்கும்

திண்டுக்கல், கரூர், நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல்லில் தலா 2 பேருக்கும்

தருமபுரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி மற்றும் திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இன்று மொத்தம் 22,757 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 510 ஆண்கள் 553 பெண்கள் என மொத்தம் 1,063 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

567 பேர் இன்று குணமடைந்த நிலையில் 5174 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.