சென்னை: பாஜக பந்த்-க்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் நடைபெற்ற  கார் வெடிப்பு, இதுதொடர்பான விசாரணையில், கோவையின் முக்கிய 5 இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைக்க திட்டமிட்ட செயல் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து,  பயங்கரவாதத்துக்கு எதிராகவும், தமிழகஅரசின் மெத்தனைத்தை கண்டித்தும், வரும் 30ந்தேதி கோவையில் பந்த் நடத்தப்படும் என பாஜக மாநில தலைமை அறிவித்து உள்ளது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் கடைகளையோ, நிறுவனங்களை அடைக்கக்கோரி யாராவது வற்புறுத்தினால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், பாஜகவின் பந்த் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுவில், கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், பந்த் அன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் ஆதரவு தருமாறு பாஜக நிர்வாகிகள் அழுத்தம் தருவதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் மாநில அரசை குற்றம்சாட்டி பந்த் நடத்துவது தேவையற்றது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வரும் திங்கட்கிழமை (அக் 31) பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, இன்று பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்தனர்.

கோவை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி 31ந்தேதி பாஜக சார்பில் பந்த் அறிவிப்பு…

கோவை கார் வெடிப்பில் பலியான முபின், அமேஷான், பிளிப்கார்ட் மூலம் வெடிமருந்துகளை வாங்கியது அம்பலம்!

கோவை கார் வெடிப்பு தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும்! அமைச்சர் செந்தில் பாலாஜி