சென்னை: பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலைக்கு நல்லது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயல்வதாக கூறி பாஜக சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  சில பத்திரிகையாளர்களின் எடக்குமடக்கான கேள்விகளால் கோபமடைந்து, மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி சுத்தி சுத்தி வரீங்களே” என சாடினார். இதற்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகளும், சில உடக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிவிட்டுள்ள டிவிட்டில், மனம் போன போக்கில் வாயில் வருவதை எல்லாம் வார்த்தைகளாக  @annamalai_k பேசுவது அநாகரிகமானது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பத்திரிக்கையாளர்களிடம் கண்ணியத்துடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள வேண்டும்.  அப்படி நடந்து கொள்ள முடியவில்லை என்றால் அவரது தலைவர் மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலையின் எதிர்கால அரசியலுக்கு நல்லது என குறிபிபட்டுள்ளார்.