பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

நமீதா மாரிமுத்து, நாடியா, அபிஷேக் வெளியேற்றப்பட்ட்டுள்ளதால் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சதந்திரம் டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் , ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

நாணயங்கள் வைத்திருக்கும் ஐந்து பேரை அழைத்த பிக் பாஸ் தங்கள் நாணயத்தை பயன்படுத்தி மதுவிற்கு பதிலாக நீங்கள் ஐவரில் ஒருவர் தலைவராக மாறலாம் என்றார். ஆனால் அனைவரும் மது தலைவராக இருக்க விரும்புவதாக தெரிவித்த நிலையில் அடுத்த வாரம் நாணயத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நான்காவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் பாவனி, அபினய், பிரியங்கா, அக்ஷரா, வருண், ஸ்ருதி, இசைவாணி, இமான் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

முதல் ப்ரோமோவில், ’எங்களுக்கு ஒரு க்ளாரிட்டி கொடுங்க, அப்போ தான் நாங்க செஞ்சது தப்பா, ரைட்டான்னு தெரியும்’ என பாவனியும், சுருதியும் பிக் பாஸிடம் கேட்கிறார்கள். ’ராஜு நேத்து வந்ததும் கேட்ட முதல் கேள்வி, தாமரைக்கு நாங்க காயின் எடுத்துக் கொடுத்தோம், குடு அந்த காயின…. ரெண்டாவது இது காயின் எடுக்குறதுக்கான கேம் கிடையாது, மக்கள் நம்மள எப்படி பாக்குறாங்கன்றது தான்’ என சுருதி பாவனியிடம் கூறுகிறார்.

இரண்டாவது ப்ரோமோவில், ஹவுஸ் மேட்ஸ்சிற்கு ஸ்னாக்ஸ்கள் கொடுக்கப்படுகிறது. அதனை எடுத்து கொள்ள அனைவரும் போட்டிபோட்டு கொண்டிருக்கும் நிலையில் இசைவாணி மட்டும் தனியாக இருக்கிறார். அப்போது இசைவாணியை அழைக்கும் பிக் பாஸ், இந்த வாரம் நெருப்பு ஆற்றலை குறிக்கும் நாணயம் உங்களிடம் உள்ளது, உங்களுக்கு கொடுக்கப்பட்ட சக்தியை இன்னும் முறையாகவும், சுவாரஸ்யமாகவும் பயன்படுத்தவில்லை என கூறுகிறார். இதனை தொடர்ந்து வெளியே வரும் இசைவாணி, உணவு பொருட்களை நீங்கள் எடுப்பது தவறு என கூறும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்று இசைவாணி புதிய ரூல்ஸ் போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது ப்ரோமோவில் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ டாஸ்க்கில் நாள் முழுவதும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்காத இருவரை தேர்ந்தெடுத்து கூறுமாறு பிக் பாஸ் அறிவிக்கிறார். நகரத்தின் தலைவரான நிரூப், பாவனியையும், கிராமத்தின் தலைவரான அக்ஷரா, மதுவையும் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து மது மற்றும் பாவனி இருவரும் இன்று இரவு முழுவதும் கார்டன் ஏரியாவில் நெருப்பு மூட்டி அதனை அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். எனவே பாவனி, மது இருவர் மட்டும் கார்டன் ஏரியாவில் நெருப்பு மூட்டி தூக்கத்துடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் உள்ளது.