பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம்வரும் சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ள சல்மான் கான் இந்தப் படத்திற்கு சிக்கந்தர் என பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக ரம்ஜான் (ஈத்) பண்டிகையின் போது சல்மான் கான் படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு ஈத் பண்டிகைக்கு அவரது படம் எதுவும் வெளியாகவில்லை.

சல்மான் கான் நடித்த தபாங், பாடிகார்ட், ஏக் தா டைகர், பஜ்ரங்கி பைஜான், சுல்தான், பாரத் மற்றும் கிசி கா பாய் கிசி கி ஜான் ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையின் போது ரிலீஸ் ஆனது.

இதனால் அவரது ரசிகர்களை மகிழ்விக்க தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சல்மான் கான் இந்த ஈத் பண்டிகைக்கு சிக்கந்தர் படம் குறித்த அறிவிப்பு வெளியாவதாகவும் அடுத்த ஈத் பண்டிகைக்கு சிக்கந்தர் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்துள்ளார்.