சென்னை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜியின் ராஜினாமா பாஜகவுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி உள்ளார்

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை ஆர்.கே.நகரில் பாஜக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்ள்ளது.  இன்று அந்த அலுவலகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

அண்ணாமலை அப்போது செய்தியாளர்களிடம்,

“ஆளும் கட்சி சார்ந்து பேச சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சபாநாயகர் சட்டமன்றத்தில் நடுநிலையாக நடக்கவில்லை. மாறாக அவர் தி.மு.க. உறுப்பினர் போலப் பேசுகிறார். எனவே ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்து சென்றார் என்று நினைக்கிறேன். 

ஆளுநருக்காக எழுதிக்கொடுக்கப்பட்ட உரையில் 10 பொய்களை நாங்களே கண்டுபிடித்தோம். பொய்களை எழுதிக் கொடுத்து அரசைப் பாராட்ட வேண்டும் என்று கூறினால் எப்படிப் பாராட்ட முடியும்? 

கட்ந்த 8 மாதமாக இலாகா இல்லாத அமைச்சராக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை வைத்திருந்தார்கள். தற்போத அமைச்சர் பதவியைச் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்திருப்பது பாஜகவுக்குக் கிடைத்த வெற்றியாகும்” 

என்று கூறினார்.