சென்னை:
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை கூறியதற்காக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில், பங்கேற்ற கே. அண்ணாமலை திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை கூறினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆற்காடு வீராசாமியின் மகனும், வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வீராசாமி கண்டம் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நாமக்கல் பொதுக்கூட்டத்தில் உங்கள் தந்தையார் ஆற்காடு வீராசாமி குறித்து தவறான தகவலை அளித்ததற்ககாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆற்காடு வீராசாமி நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.