ர்மபுரி

மிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிறித்துவ ஆலயம் செல்வதை சில வாலிபர்கள் தடுத்துள்ளனர். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தர்மபுரி மாவட்டத்தில் 2 நாளாக `என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்ட வருகிறார்.  அவர் பி.பள்ளி பட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்குச் சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ வாலிபர்கள், அண்ணாமலையை ஆலயத்துக்கு வரக்கூடாது என்றும், மாதா சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்றும் கூறி தடுத்து நிறுத்தினர். அவர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு கோஷம் எழுப்பி மணிப்பூர் கலவரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அங்கு அண்ணாமலைக்கும், கிறிஸ்தவ வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அண்ணாமலை மணிப்பூரில் நடந்தது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு என்றும், அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அவர்,

“இலங்கையில் 2009-ல் கலவரம் நடந்தது. அங்குத் தமிழர்கள் இறந்தபோது யாரும் கேட்கவில்லை. சம்பந்தமே இல்லாமல் தி.மு.க.வினர் பேசுவது போல் பேசக்கூடாது. அனைவரும் ஆலயத்துக்கு வர உரிமை உள்ளது. மேலும் ஆலயம் உங்கள் பெயரில் உள்ளதா?

என்று தடுத்து நிறுத்தியவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது காவல்துறையினர் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்களை அந்த பகுதியில் இருந்து வெளியேற்றினர். பிறகு ஆலயத்துக்குள் சென்ற அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். வாலிபர்கள் வழிமறிப்பு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.