புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தமிழக அரசு 75% பேருந்துகளை  இயக்கிய போதும் தனியார் பேருந்துகளில் ஏராளமான அளவில் மக்கள் பயணித்துள்ளனர். 

இன்று முதல் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இன்று  புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் முண்டியடித்துக் காணப்பட்டது.  தனியார் பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பணியாளர்கள் எனப் பலரும் நிற்கக் கூட இடமின்றி மிகவும் சிரமத்திற்கு இடையே பயணித்துள்ளனர்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் புதுக்கோட்டையில் 6 பணிமனைகளில் இருந்து 75 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகக் கூறி உள்ளது.  அதே வேளையில் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.