சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் 25-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற இருப்பதாக  கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அமுமுக  பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கழகத்துணைத் தலைவர் S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகின்ற 25-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றி தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில் தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் சசிகலா பங்கேற்பாரா என்பது குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.